3 குழந்தைகளுடன் தாய் மாயம் - போலீசார் விசாரணை

3 குழந்தைகளுடன் தாய் மாயம் - போலீசார் விசாரணை

3 குழந்தைகளுடன் தாய் மாயம் - போலீசார் விசாரணை

தியாகதுருகம் அருகே 3 குழந்தைகளுடன் தாய் மாயம். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த புக்குளத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் இவரது மனைவி கவிதா, 30; இவர்களுக்கு தர்ஷன், 11; இரட்டையர்கள் தருண், 7; தரண், 7; என 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ம் தேதி குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என மருந்து வாங்க குழந்தைகளுடன் கடைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குழந்தைகளுடன் கவிதாவைக் காணவில்லை. இது குறித்து கவிதாவின் தாய் அனுராதா கொடுத்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story