தகாத தொடர்பை கண்டித்ததால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை

தகாத தொடர்பை கண்டித்ததால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை

தற்கொலை

புதுகோட்டை மாவட்டம், மெய்யனம்பட்டியில் தகாத உறவை தட்டிகேட்டதால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விராலிமலை தாலுகா, பேராம்பூர் ஊராட்சி மெய்யனம்பட்டியை சேர்ந்தவர் மருதை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கண்ணாத்தாள்(25). இவர்களுக்கு 3, 5 வயதில் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கண்ணாத்தாளுக்கு, அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வாலிபரின் வீட்டுக்கு சென்ற கண்ணாத்தாள், தன்னையும் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். .இதனால் வாலிபரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துமாத்துார் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வந்து கண்ணாத்தாளுக்கு அறிவுரை கூறி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற கண்ணாத்தாள், அந்த வாலிபருடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று கூறினார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் கண்ணாத்தாள் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.மாத்துார் போலீசார் விரைந்து கண்ணாத்தாள் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story