இரண்டு குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை

இரண்டு குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை

தற்கொலை 

சங்ககிரி அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோகுல் (30) அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6) ரிஷ்மிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் கணவன், மனைவி இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்படவே கோகுல் வழக்கம் போல் தனது பணிக்கு சென்றுவிட்டார். குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த சுகமதி தான் பெற்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து சங்ககிரி துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் கணவன் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story