இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயம் காவல்துறையினர் விசாரணை

இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயம் காவல்துறையினர் விசாரணை

இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயம் 

பொம்மிடி அருகே உள்ள பொ.நடுர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் மாயம் காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அருகே உள்ள பொ.நடுர் பகுதியை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் நத்தமேட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் 2 பேரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று காலை குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு புவனேஸ்வரி சென்றார். ஆனால் அவர் 2 குழந்தைகளுடன் மாயமானார். குடும்பத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புவனேஸ்வரி யின் தாயார் கலைவாணி பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பொம்மிடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story