இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை - கணவர் கைது

இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை - கணவர் கைது

கைது செய்யப்பட்ட கோகுல்

சங்ககிரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக இரு பெண் குழந்தைகளுடன் தாய் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம் பட்டி, வினோபாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோகுல் (30) இவரது மனைவி சுகமதி (24). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக தனது இரு பெண் குழந்தைகளுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேவூர் போலீஸார், மனைவியை தற்கொலைக்குத் தூண்டியது, வன்கொடுமை சட்டத்திலும் கோகுலைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story