மோட்டார் பைக் திருட்டு

மோட்டார் பைக் திருட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனியார் கல்லூரியின் பின்புறம் நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனியார் கல்லூரியின் பின்புறம் நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் 18 வயதான கௌதமன். இவர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்.இந்நிலையில் கல்லூரிக்கு தனது மோட்டார் பைக்கில் சென்ற கௌதமன் கல்லூரியின் பின்புறம் மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகியிருந்தது.மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கௌதமன் இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story