தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் - ஏனாத்துாரில் விபத்து அபாயம்

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் - ஏனாத்துாரில் விபத்து அபாயம்

 விபத்து அபாயம் 

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலத்தால் ஏனாத்துாரில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில் இருந்து நல்லுார், தர்மநாயக்கன்பட்டரை வழியாக வையாவூர் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் குறுக்கே செல்லும் மழைநீர் கால்வாயின்மீது சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கவில்லை. அரைகுறையாக பில்லர்கள் மட்டுமே உள்ளது. இதனால், இரவு நேரத்தில் சிறுபாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தெரு மின்விளக்கு வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலை தடுமாறி சிறுபாலத்தின் பக்கவாட்டு பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சிறுபாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story