சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாடுகளால் அவதி

திருப்பத்தூர் பிரதான சாலையில் மாடுகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி. நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஒட்டிகள் கடும் அவதிகுள்ளகிவருகின்றனர். திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையாக திகழக்கூடிய சென்னை, பெங்களூர், சேலம், தர்மபுரி, பாண்டிச்சேரி,உள்ளிட்ட சந்திப்பு சாலையாக திகழ்ந்து வருகின்றது. இந்த சாலையில் பொதுமக்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படுகின்ற சாலையாக திகழ்ந்து வருகின்றது. இந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது சில நேரங்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருவது வாடிக்கையாக திகழ்ந்து வருகிறது. இதைக் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாட்டின் உரிமையாளருக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Tags

Next Story