குண்டும் குழியுமான காவூர் சாலை

குண்டும் குழியுமான காவூர் சாலை

குண்டும் குழியுமான காவூர் சாலை 

காவூர் கிராம சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டை பாலாற்று பாலம் அருகே பிரிந்து, காவூர் வழியாக காவியத்தண்டலம் செல்லும் 2 கி.மீ., துாரம் ஒன்றிய சாலை உள்ளது. காவூர், காவியதண்டலம்உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் பாலாற்று பாலம் சீரமைப்பு பணி நடந்தத போது நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள், காவூர் கிராம சாலை வழியாக செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டது. அச்சமயம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் இயங்கியதால் காவூர் சாலை சேதமடைந்து தற்போது வரை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இச்சாலை குறுகியதாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட இயலாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே ஒரக்காட்டுப்பேட்டை பால சாலையில் துவங்கி காவியதண்டலம் காலனி வரையிலான சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தர அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story