காந்தி சாலையில் திடீர் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காந்தி சாலையில் திடீர் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பள்ளம் 

விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை.
காஞ்சிபுரத்தில் பிரதான சாலையான காந்தி சாலையில், பட்டு கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், தனியார் ஜவுளிக்கடைகள் உணவகம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட வழித்தடத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் காந்தி சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையின் நடுவில், திடீரென மண் உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story