வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதி

பள்ளிபாளையத்தில் குறுகலான சாலையில் செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

பள்ளிபாளையத்தில் குறுகலான சாலையில் செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் நால்ரோடு பிரதான சாலையில் மேம்பால தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், குறுகிய சாலையில் அதிகளவு கனரக வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்டவை சென்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பினால், பழைய பாலம் முழுவதும் வாகனங்கள் தேங்கி நின்றது. இதனை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் இணைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் பொழுது ,அதிக வாகனங்கள் வரும் நேரங்களான காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், மேம்பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைத்து, வாகனப் போக்குவரத்து குறைந்த பிறகு இரவு நேரத்தில் பணிகளை தொடர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது...

Tags

Next Story