புழுதி கிளம்பும் சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

அருப்புக்கோட்டையில் மோசமாக சேதமடைந்து புழுதி கிளம்பும் சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டயில் எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து புறவழிச் சாலை வரை செல்லும் இணைப்பு சாலை முழுவதும் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

கனரக வாகனங்களும் இந்த பாதை வழியாகத்தான் புறவழிச் சாலையை சென்றடைகின்றன. சாலைகளில் பல இடங்களில் மேடு பள்ளங்கள் காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சில சமயங்களில் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் சாலையில் மழை நீர் ஓடும்போது பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும் இந்த சாலை முழுவதும் புழுதி கிளம்பி இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் இந்த பாதையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன் உடனடியாக சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story