குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் செல்லும் தமிழக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.  

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் செல்லும் தமிழக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் செல்லும் தமிழக சாலை 2 கிலோமீட்டர் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த வழியாக அரியனப்பள்ளி மற்றும் குப்பம் பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் தினந்தோறும் பல கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து ஜல்லி கற்களுடன் குண்டும் குழியுமாகவும் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்ப்பட்டு தொடர்ந்து பல வாகன ஓட்டுகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனால் புதிய தார்சாலை அமைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags

Next Story