வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க மாநகராட்சி சார்பில் தற்காலிக நிழற்கூரை!

திருப்பூரில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க மாநகராட்சி சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க மாநகராட்சி சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வரும் நாட்களில் இன்னும் கோடை வகைகளில் தாக்கம் அதிக அளவு இருக்கும் எனவும் திருப்பூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில் புதுச்சேரியில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டி களுக்காக பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் தற்போது பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற பச்சை திரை கொண்ட மேற்கூரை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சிக்னல்களிலும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னலில் இரண்டு நிமிடம் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிவதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story