முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையின் சார்பாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த பி.ஆர்.அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்நிகழ்ச்சி முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இதில் பி.ஆர்.அகாடமியின் நிர்வாக பங்குதாரரான சி ஏ ப.ராஜா, கல்லூரியின் சார்பாக, செயலாளர் முத்துவேல் ராமசாமி, இயக்குநர் முனைவர் ஆர்.செல்வ குமரன், முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார், புலமுதன்மையர் முனைவர் எம்.என்.பெரியசாமி மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஜி. தங்கபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக கல்லூரி மாணவர்கள் கற்றலோடு இணைந்து பட்டயக் கணக்காளர்கான இடைத்தேர்வு பயிற்சி வகுப்புகள் மற்றும் பாடம் சார்ந்த சந்தேக நிவர்த்தி ஆகியவற்றை பெறுவர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் வணிகவியல் துறையின் பட்டயக் கணக்காளருக்கான இடைத்தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களும் மற்றும் உதவிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story