கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கல்லூரியில்  புரிந்துணா்வு ஒப்பந்தம்

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம்.மருந்தியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.


காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம்.மருந்தியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருந்தியல் கல்லூரியில் சிட்டஸ் மருந்தியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் திருமழிசை சிட்டஸ் பாா்மா சா்வீசஸ் நிறுவனத் தலைவா் எஸ்.டி.ராஜேந்திரன்,எஸ்.ஆா்.எம்.பதிவாளா் எஸ்.பொன்னுசாமி ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா். பின்னா் பதிவாளா் பொன்னுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மருந்தியல் கல்வி பயிலும் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் சிட்டஸ் நிறுவனத்துடன் இணைந்து மருந்தியல் துறை தொடா்பான கூட்டு ஆராய்ச்சி, மருந்து கண்டுபிடிப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்றம், மருந்து தயாரிப்பு, காப்புரிமை, வணிகம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட இந்த ஒப்பந்தம் உறுதுணை புரியும். மருந்தியல் மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, மருந்தியல் பரிசோதனைக் கூடம் தொடா் ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு,பயிற்சியுடன் உதவித் தொகை, புத்தாக்கக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவோா் திறன் மேம்பாடு ஆகிய நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று கூறினார்.

Tags

Next Story