சத்தியமங்கலம் பகுதியில் பிடிபட்ட மலை பாம்பு

சத்தியமங்கலம் மற்றும் ஆரியூர் பகுதிகளில் மலை பாம்பு பிடிபட்டது!

குளத்தூர் அருகே உள்ள சத்தியமங்கல பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி இவரது வீட்டு அருகே மலைப்பாம்பு ஒன்று இருந்து கொண்டு அப்பகுதியில் செல்வோரை அச்சுறுத்தி வருவதாக அவர் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் தீயணைப்பு துறை அலுவலர் அப்துல் ரகுமான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதேபோன்று ஆரியூர் பகுதியில் அசோக் என்பவர் வீட்டு அருகே மலைப்பாம்பு இருப்பதாக சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

இத்தகவலை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் அந்த மலைப் பாம்பினை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags

Next Story