சமுத்திரபட்டியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைபாம்பு மீட்பு

சமுத்திரபட்டியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைபாம்பு மீட்பு

பிடிபட்ட மலைப்பாம்பு

சமுத்திரபட்டியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைபாம்பு மீட்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராப்பட்டி கிழக்குத் தெருவில் உள்ள கூலி தொழிலாளி சந்திரசேகர்(45) வீட்டில் அருகே மலைப்பாம்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து நத்தம் தீயணைப்பு நிலை அலுவலர் லெட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 0 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாபகமாக உயிருடன் பிடித்து வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story