இரண்டு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து

இரண்டு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து

மலை ரயில் சேவை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில் மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் இரண்டு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் ,கோத்தகிரி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக பர்லியார் மலை பகுதியில் கன மழை பெய்து வருவதால் மலை ரயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், மண் சரிந்து உள்ளதாலும் இன்று மலை ரயில் சேவை பாதிக்கபட்டது. இதனிடையே கன மழை எச்சரிக்கை மற்றும் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் உதகை - மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை 11-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story