நரசிங்கபுரத்தில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்.பி

நரசிங்கபுரத்தில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்.பி

அங்கன்வாடி மையம் திறப்பு 

நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பழைய உடையம்பட்டியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகாமணி திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய உடையம்பட்டியில் அங்கன்வாடி மையம் அமைக்க கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு அளித்த நிலையில் அதற்காக 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று அங்கன்வாடி மைய கட்டிடத்தை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதம சிகாமணி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இவ்விழாவில் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகரச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story