வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்.பி

வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்.பி

எம்.பி கலாநிதி வீராசாமி

வடசென்னை மக்களவை தொகுதியில் பல் நோக்கு கட்டிடம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு மைதான கட்டுமான பணிகளை எம்.பி கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள சென்னை துறைமுகம் நிறுவனத்திடமிருந்து (CSR) சமூக பொறுப்பு நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டம் மூலமாக பெற்ற நிதியையும் இணைத்து ரூபாய் 2 கோடி பெற்று ஆர்.கே. நகரில் உள்ள அன்னை சத்யா நகர் மெயின் தெருவில், பல் நோக்கு கட்டிடம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு ஷட்டில் கோர்ட் கட்டுமான பணிகளுக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் மற்றும் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபினேசர் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story