மக்கள் களம் நிகழ்ச்சியில் நலதிட்ட உதவிகள் வழங்கிய கனிமொழி எம்பி

மக்கள் களம் நிகழ்ச்சியில் நலதிட்ட உதவிகள் வழங்கிய கனிமொழி எம்பி
 நலதிட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.


விளாத்திகுளம் பகுதியில் நடந்த மக்கள் களம் நிகழ்ச்சியில் நலதிட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி - புதூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காடல்குடி, மாவிலோடை, என். ஜெகவீரபுரம், புதலாபுரம், கந்தசாமிபுரம் மற்றும் மாதலப்புரம் ஆகிய ஊராட்சிகளில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கனிமொழி எம்பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், இலவச வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றியக் கழக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story