எம்பி - கவுன்சிலரை காணவில்லை - அதிமுகவினர் கோஷம்

எம்பி - கவுன்சிலரை காணவில்லை - அதிமுகவினர் கோஷம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி 41 வது வார்டுக்கு உட்பட்ட நவல்பட்டு சாலையில் பாதாள சாக்கடை பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருவதுடன் இதனால் சாலைகள் மிகவும் மோசமாகவும் குண்டும் குளியுமாக மாறி வருகிறது. மேலும் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேரும் சகதியும் விளங்குகிறது. இதனை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திருச்சி எம்பி திருநாவுக்கரசை காணவில்லை என்றும் திருச்சி மாநகராட்சி 41வது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜன் காணவில்லை என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி 41வது வட்டச் செயலாளர் அபிமன்யு செயலாளர் தீன் கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், கண்ணன், ஆனந்தகுமார், பெரியசாமி, சோமசுந்தரம், காதர் கோபி, பிரகாஷ், தங்கராஜ் அம்மா கண்ணு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story