நியாய விலை கடையை திறந்து வைத்த எம்பி ராஜேஸ்குமார்

பெரியப்பட்டியில் கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக இன்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்

நாமக்கல் நகராட்சி 37வது வார்டு பெரியப்பட்டி பகுதியில் நியாய விலை கடை அமைய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் விடுத்த கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக இன்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

பின்பு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் திமுக தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், நகர் மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, நகராட்சி கமிஷனர் சென்னு. கிருஷ்ணன் , கூட்டுறவு துறை அலுவலர்கள், நியாயவிலைக் கடை ஊழியர்கள் , நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story