எம்பிக்கள் சஸ்பெண்ட் - விசிக ஆர்ப்பாட்டம்

எம்பிக்கள் சஸ்பெண்ட் - விசிக ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

வெண்ணந்தூரில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விசிக, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டது கண்டித்து வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் , சேலம்-நாமக்கல் மண்டல துணைச் செயலாளர் வ.அரசன், நாமக்கல் நாடாளுமன்ற துணை செயலாளர் இரா.கபிலன், ஒன்றிய பொருளாளர் பழ.செங்கோட்டுவேல், திராவிட முன்னேற்றக்கழகம் நெசவாளர் அணி மாவட்ட தலைவர், வெண்ணந்தூர் பேரூராட்சி துணை தலைவர் S.P.பட்டு.மாதேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராசிபுரம் நகர செயலாளர் மணிமாறன், திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் நகர கழக செயலாளர் பிடல் சேகுவேரா, திராவிடர் விடுதலைக் கழகம் வெண்ணந்தூர் பொருப்பாளர் ராமச்சந்திரன், விசிக மாவட்ட து.அமைப்பாளர் சி.கரிகாலன்,ஒன்றிய துணை செயலாளர் பெ.செந்தில்,சசிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட துணை செயலாளர் பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர் கஸ்தூரி, மங்களபுரம் விசிக பொருப்பாளர் துரை.காளிதாஸ் கிழக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், டெய்லர் ராஜி, பிள்ளாநல்லூர் முரளி,அரவிந்தன், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் பொறுப்பாளர் மெகபூப் ஜான், பெரியார் உணர்வாளர்கள் , இரத்தினம்,லூசோ உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் , துரைசாமி,கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story