சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்: ஆனந்த் சீனிவாசன்

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்: ஆனந்த் சீனிவாசன்

செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் சீனிவாசன்

காங்கிரஸ் தலைமையில் அரசு அமைந்த உடன் ஜி எஸ் டி சீர்திருத்தி சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கே கோபிநாத் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி பிரிவின் மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன் வாக்கு சேகரித்தார் இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 2014 ஆண்டிற்கு முன்பு பாரத பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வரி விதிப்பு நடைமுறைகளில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் அதற்குப் பின்பு அமைந்த மோடி தலைமைகளான அரசு ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பின் வாயிலாக நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக முடக்கி போட்டு உள்ளது.

இதனால் பல முனைகளில் இருந்தும் வரிவிதிப்பு ஏற்பட்டு சிறு தொழில் நிறுவனங்கள் நசுக்கப்பட்டு அடியோடு அழிந்து வருகின்றன. எனவே ராகுல் காந்தி தலைமையில் புதிய அரசு அமைந்தால், ஜிஎஸ்டி வரி விதிப்புகளில் அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் உலகச் சந்தைகளில் கச்சா எண்ணையின் விலை நிர்ணயத்திற்கு ஏற்றார் போல பெட்ரோலிய எரிபொருட்களின் விலை நிர்ணயத்தில் மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்றியுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த பொழுதே காங்கிரஸ் தலைமையிலான அரசு குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை மக்களுக்கு வழங்கியது. மேலும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை குறித்து பிஜேபியினர் தரம் தளர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஒரு குடும்பத் தலைவிக்கு தான் எரிபொருளின் உபயோகமும் மதிப்பும் தெரியும் என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மத்திய நிதி அமைச்சரோ தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை எல்பிஜி பயன்படுத்துவதில்லை என்பதால் அது பற்றி எனக்குத் தெரியாது என பொறுப்பற்று பேசி வருகிறார்.

எனவே ராகுல் காந்தி தலைமையில் புதிய அரசு அமைந்து நாடே வளம் பெறும் என உறுதி அளிப்பதாக அவர் தெரிவித்தார் பேட்டி: ஆனந்த் சீனிவாசன், மாநிலத் தலைவர், ஊடகம் மற்றும் செய்தி பிரிவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

Tags

Next Story