தார்ப்பாயால் மூடாத மண் லாரி - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தார்ப்பாயால் மூடாத மண் லாரி - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தார்பாய் மூடாத மண் லாரி 

திருவாலங்காடு ரயில் நிலைய சாலை வழியே, தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆந்திர மாநிலம் நகரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சவுடு மண் எடுத்துச் செல்லும் லாரிகள், திருவாலங்காடு ரயில்வே கேட் அமைந்துள்ள சின்னம்மாபேட்டை சாலை வழியாக சென்று வருகின்றன. சவுடு மண்ணுடன் செல்லும் லாரிகள், இவ்வழியே அதிவேகமாகவும், தார்ப்பாய் மூடாமலும் செல்வதால், மண் துகள்கள் சிதறி இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story