மண் கடத்தல் - லாரி பறிமுதல், ஓட்டுநர் தப்பியோட்டம்

மண் கடத்தல் - லாரி பறிமுதல், ஓட்டுநர் தப்பியோட்டம்

காவல் நிலையம்

வந்தவாசி அருகே மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் பறக்கும் படை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையில் அலுவலர்கள் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பொன்னூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story