முத்ரா கடன் வழங்குவதில் மோசடி - வங்கி மேலாளர் மீது வழக்கு

முத்ரா கடன் வழங்குவதில் மோசடி - வங்கி மேலாளர் மீது வழக்கு
முத்ரா திட்டத்தில் கடன் உதவி வழங்குவதில் மோசடி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்துார் அருகே இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (59)இவர் தளவாய்புரம் எஸ்பிஐ கிளை மேலாளராக 2017 -- 2019 வரை பணிபுரிந்தார்.கடந்த, 2018 மார்ச் முதல் செப் 26 வரை முத்ரா கடன் திட்டத்தில், 32.75 லட்சம் ரூபாயை 16 பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார். இதற்காக எந்த ஆவணமும் ஆதாரமாக பெறப்படவில்லை. வங்கி உயரதிகாரிகள் ஆவணங்களை தணிக்கை செய்ததில் பாஸ்கரன் 33.87 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. மண்டல மேலாளர் செந்தில்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஸ்கரன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story