முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா!

முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா!


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். மன்னர் கல்லூரி ஆங்கில பேராசியர் அய்யாவு, டாக்டர் சலீம், தலைமை ஆசிரியர்கள் (வயலோகம்) ஜெயராஜ், (இலுப்பூர்) ஜான்பிரிட்டோ, அமானுல்லா, அதாய் டாக்டர் அரபிக் கல்லூரி முதல்வர் இம்ரான்கான் ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து தனி திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், கல்வி தொடர்பான எந்தச் சந்தேகம் எழுந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் தயக்கம் இன்றி கேட்டறிந்து பல்வேறு நிலைகளில் முன்னேற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.

முன்னதாக, பள்ளியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் தனித்தனி குழுக்களாக கலந்து கொண்ட மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

Tags

Next Story