நத்தத்தில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

நத்தத்தில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

நத்தம் காமராஜர் நகர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நத்தம் காமராஜர் நகர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்காமராஜர் நகர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா 1999-ஆம் ஆண்டில் 15 நாள் திருவிழாவாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு வருகிற 18-ஆம் தேதி அழகர்மலை தீர்த்தம் அழைத்துவரப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளுக்கு பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது.தொடர்ந்து வருகிற 21-ஆம்தேதிபால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், 25-ஆம் தேதி அம்மன்நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Tags

Next Story