நகராட்சி நிர்வாகத் துறை ஆய்வு கூட்டம்

நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பங்கேற்றார்.

தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கார்த்திகேயன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி மாநகராட்சி ஆணையரும் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நகர்ப்புர உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவர்/ அரசு முதன்மை செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர், ஹனிஷ் சப்ரா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு, மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story