பளு தூக்கும் வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கிய நகர மன்ற தலைவர்

பளு தூக்கும் வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கிய நகர மன்ற தலைவர்

நிதி உதவி வழங்கிய நகர மன்ற தலைவர்

தேசிய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள மாணவிக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் நிதி உதவி வழங்கினார்.
பள்ளிபாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் தேன்மொழி. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவி தேன்மொழி திருச்செங்கோட்டில் நடந்த பளு தூக்கும் போட்டியில் 63 கிலோ பிரிவில் 412.5 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார். ஆகவே அவர் தமிழ்நாடு பளு தூக்கும் அசோசியேசன் சார்பாக வருகிற 16-ஆம் தேதி பஞ்சாபில் நடைபெறும் நேஷனல் பவர் லிப்டிங் சாம்பியன் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார். மாணவியை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவியின் பயண செலவு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க, பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நிதி உதவி வழங்கினார். நகர திமுக நிர்வாகிகள் ரவீந்திரன், பிரபு, பார்த்திபன், சித்துராஜ், பாலாஜி,ரமேஷ் ஆகியோர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

Tags

Next Story