புதிய நியாய விலைக் கடை -நகர மன்ற தலைவர் ஆய்வு

புதிய நியாய விலைக் கடை -நகர மன்ற தலைவர் ஆய்வு

  நகர்மன்ற தலைவர் ஆய்வு 

குமாரபாளையம் நகராட்சியில் புதிய நியாய விலை கடை அமைக்கப்டும் இடத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் நகராட்சி வார்டு எண் 9 திருவள்ளுவர் நகர் பகுதிக்கு 9வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விஜயா கந்தசாமி நமக்கு நாமே திட்டத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க நிதி உதவி தருவதாக அறிவித்துள்ளார். அரசின் நிர்வாக அனுமதி கிடைத்தவுடன், புதிய நியாய விலை கடை அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்வ விஜயராணி மற்றும் நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை மிகவும் பழுதடைந்துள்ளதால் அதனையும் நேரில் பார்வையிட்டு சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள். ஆய்வின்போது நகர பொறுப்பு குழு உறுப்பினர் அண்ணமார் கந்தசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் அழகேசன், வேல்முருகன், பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Tags

Next Story