பூங்காவில் நகராட்சி சேர்மன் ஆய்வு

பூங்காவில் நகராட்சி சேர்மன் ஆய்வு
சுரண்டை நகராட்சி பூங்காவில் நகராட்சி சேர்மன் ஆய்வு
தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி பூங்காவில் நகராட்சி சேர்மன் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டை பாவூர்சத்திரம் ரோட்டில் அனுமன் நதி அருகே நகராட்சி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இப்பணியின் இறுதிகட்ட பணிகள் நேற்று மாலையில் நடைபெற்றது. இதனை சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு பூங்காவின் பணிகளை குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் பணியில் ஈடுபட்ட பணியாளர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story