திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலத்திற்குட்பட்ட கோவில்வழி பகுதியில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் கோவில்வழி பகுதியில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சை கூடம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்...
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட கோவில் வழி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி நாய்கள் அறுவை சிகிச்சை கூடம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நுண்ணுறக்கிடங்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு உள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
Next Story


