குமாரபாளையத்தில் நகர மன்ற உறுப்பினர் நிதி உதவி 

குமாரபாளையத்தில் நகர மன்ற உறுப்பினர் நிதி உதவி 

நிதியுதவி அளித்த உறுப்பினர்

குமாரபாளையத்தில் நியாய விலைக்கடை அமைக்க  நமக்கு நாமே திட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் நிதி உதவி செய்தார்.

நாமக்கல. மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி வார்டு எண் 9 திருவள்ளுவர் நகர் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தருவோம் என்று அப்பகுதி கவுன்சிலர் விஜயா, தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் நமக்கு நாமே திட்டத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க ரூபாய் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனும் மொத்த மதிப்பீட்டில், பொதுமக்கள் பங்களிப்பான ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க வழங்க முன்வந்தார். அதன்படி, அதற்கான காசோலையை 9 வார்டு கவுன்சிலர் விஜயா கந்தசாமி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் வழங்கினார்.

இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஐயப்பன், செந்தில், கந்தசாமி, வினோத்குமார், ஹரிபாலாஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story