செப்டிக் டேங்கில் விழுந்து நகராட்சி ஊழியர் பலி

செப்டிக் டேங்கில் விழுந்து நகராட்சி ஊழியர் பலி

காவல் நிலையம் 

காரைக்குடியில் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து நகராட்சி தூய்மை பணியாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பாபுரம் வள்ளலாளா் தெருவில் வசித்து வரும் விமல் என்பவரின் வீட்டின் கழிவறை சேமிப்புத் தொட்டியில் அடைப்பை நீக்குவதற்காக இதேத் தெருவைச் சேர்ந்த நகராட்சி தூய்மைப் பணியாளரான சேவுகப் பெருமாள் என்பவர் தொட்டியின் மூடியை திறந்த பாா்த்தபோது தவறி உள்ளே விழுந்தாா். பின்னா், தீயணைப்பு மீட்புப் படையினா் மூலம் சேவுகப்பெருமாள் மீட்கப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story