சாலையோரமாக குப்பையை கொட்டும் பேரூராட்சி ஊழியர்கள்

சாலையோரமாக குப்பையை கொட்டும் பேரூராட்சி ஊழியர்கள்

 திருப்புவனம் புறவழிச்சாலையில் குப்பையை கொட்டி வரும் பேரூராட்சி ஊழியர்களால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

திருப்புவனம் புறவழிச்சாலையில் குப்பையை கொட்டி வரும் பேரூராட்சி ஊழியர்களால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 18 வார்டுகளில் தினமும் 6 டன் குப்பை சேகரமாகிறது. பாக்யா நகர் அருகே அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கு குறுகிய பகுதி என்பதாலும், குப்பையை தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டியதாலும் அங்கு குப்பை நிறைந்து வருகிறது. இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் குப்பை கொட்ட இடமின்றி மதுரை - இராமேஸ்வரம் புறவழிச்சாலை பகுதியில் குப்பையை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story