கடற்கரை முகத்துவாரத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

கடற்கரை முகத்துவாரத்தில்  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
X

மேயர் ஆய்வு 

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை முகத்துவார பகுதியில் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்கும் வகையில் சுத்தப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்

தூத்துக்குடி திரேஸ்வரம் கடற்கரை மகத்துவாரப் பகுதியில் பக்கீல் ஓடை முலம் கழிவுகள் கலக்கப்படுகின்றன. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் முகத்துவாரப் பகுதியில் தேங்கி கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது மேலும் இந்த பகுதியில் வேறொரு பகுதியில் இருந்து மணல்கள் எடுத்து வரப்பட்டு பக்கீல்ஓடை கழிவுகள் நேரடியாக கடலில் கலக்கும் பாதையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .இதன் காரணமாக மழைக்காலங்களில் முறையாக கழிவுகள் வெள்ள நீர் கடலில் கலக்காமல் கரையோர பகுதி வீடுகளுக்குள்ளே போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மாநகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் திரேஷ் புறம் பக்கீல் ஓடை முகத்துவார பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கா வண்ணமும் மேலும் அந்தப் பகுதியை ஆழப்படுத்தி சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து சிந்தாதுரை மாதா கடற்கரை பகுதியில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் முட்புதர்களை அகற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமியிடம் அந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதை அடுத்து அந்த பகுதியை பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி சிந்தா துறை மாதா கடற்கரை பகுதியில் உள்ள முட்புதர்கள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றை அகற்றி இரவு நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருவதற்காக இரண்டு ஹை மாஸ் லைட் களையும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் .இதற்கு மீனவர்கள் மேயருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story