காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை

காலி குடங்களுடன்  நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் இருந்தும் வழங்காத பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.


குடிநீர் இருந்தும் வழங்காத பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.

குடிநீர் இருந்தும் வழங்காத பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்ட நூற்றாண்டு பாரம்பரியமிக்க நகராட்சியாகும். பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொடைக்கானல் பேரீச்சம் ஏரியிலிருந்து பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் தேக்கப்பட்டு தினமும் மூன்று கன அடி வீதம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது . கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது . இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 2,7,9 ஆகிய மூன்று வார்டு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி நுழைவு பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் ,பால்பாண்டி ,ராஜேஸ்வரி அகியோர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம் நகராட்சி பொறியாளர் ராஜேஷ் ,நகர் மன்ற தலைவர் சுமிதா அவர்களின் கணவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் போதிய அளவு சோத்துப்பாறை அணையில் தண்ணீர் இருந்தும் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் பகுதிக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை சார் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் . தண்ணீர் வழங்கப்படவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கூறுகின்றனபொதுமக்கள் கூறுகின்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவி வருகின்றது .

Tags

Next Story