பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கௌரவிப்பு

சங்ககிரியில் மேதினத்தி முன்னிட்டு மக்கள் மன்றத்தின் சார்பில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி மக்கள் மன்றத்தின் சார்பில் மே தினத்தை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மக்கள் மன்ற செயலாளர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது.இதில் சேலம் கலைக்கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் கலைச்செல்வன் தூய்மைபணியாளர்களின் சேவைகளை பாராட்டி அவர்களை கௌரவித்து பரிசுகள், இனிப்புகளை வழங்கினார். அப்போது ஓய்வு பெற்றவேளாண் அலுவலர் பழனியப்பன், ஓம்ராம் அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேலு, முத்தமிழ் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர் கணேஷ், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்க்குமார், சங்ககிரி கிழக்கு வட்டாரத் தலைவர் டகாசிலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி பெருமாள், வழக்குரைஞர் மணிசங்கர், இன்னர்வீல் சங்கத்தலைவி ராஜம்மாள், நிர்வாகிகள் கீதா, இந்திராணி, சரஸ்வதி, தேவண்ணகவுண்டனூர் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி வட்ட நிர்வாகி ராஜேந்திரன், பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் ஆ.மாணிக்கம், பேரூராட்சி துப்பரவு பணி மேற்பார்வையாளர் வெங்கடேஷ், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story