சேலத்தில் வாலிபர் கொலை: தொழிலாளியிடம் தீவிர விசாரணை

சேலத்தில் வாலிபர் கொலை: தொழிலாளியிடம் தீவிர விசாரணை

கோப்பு படம் 

சேலத்தில் வாலிபர் கொலையில் சிக்கிய தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சேலம் சூரமங்கலம் பூனைக்கரடு பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது வீட்டின் மொட்டை மாடியில் கடந்த 4-ந் தேதி வாலிபர் ஒருவர் மர்ம உறுப்பை அறுத்தநிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அய்யம்பெருமாள் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பாலு என்ற பாலமுருகன், அவருடைய மனைவி வரலட்சுமி ஆகியோர் தலைமறைவாகி இருப்பதும்,

கொலை செய்யப்பட்ட வாலிபர், துறையூரை சேர்ந்த தியாகு (24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள தம்பதியை தேடி சேலம் போலீசார் துறையூருக்கு சென்றனர்.

இந்தநிலையில் வாலிபர் கொலை தொடர்பாக சம்பவத்தன்று பாலமுருகன் வீட்டிற்கு வந்த சுரேஷ் என்ற தொழிலாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது, மர்ம உறுப்பை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்ய காரணம் என்ன? கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? கொலையில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து சுரேசை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம், தலைமறைவாக உள்ள பாலமுருகன், அவருடைய மனைவி வரலட்சுமி ஆகியோர் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story