கூலித்தொழிலாளி கொலை - சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 6 போ் கைது

கூலித்தொழிலாளி கொலை - சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 6 போ் கைது

பைல் படம் 

நிலக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த நடுப்பட்டியில் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவில் வீட்டு முன் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஆண்டாா் (50) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கொலையாளிகளை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, நடுப்பட்டி கிராமத்தினா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்த நிலையில், கரியாம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (24), மருதை (25), லோகநாதன் (19) ரமேஷ்குமாா் (36), விக்னேஸ்வா் (22), காா்த்திக் (19) ஆகிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story