இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பு?

இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு முக்கண்ணாமலைப்பட்டி பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகைக்கு முன்பு 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி முக்கண்ணாமலைப்பட்டியில் இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை முதல் நோன்பை வைக்க தொடங்கினார்கள். இந்த நோன்பானது அதிகாலை முதல் மாலை வரை கடைபிடிப்பது வழக்கம். அதனை தொடர்ந்து மாலையில் நோன்பு திறக்கப்படும் அதன் ஒருபகுதியாக இன்று மாலை முக்கண்ணாமலைப்பட்டி பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Tags

Next Story