முஸ்லிம்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை

முஸ்லிம்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை

திண்டுக்கல் மாவட்டம், வேல்வார்க்கோட்டை ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு மாதமாக மழை இல்லை. மழை இல்லாததால் அனைத்து வாழை மற்றும் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. மழை இல்லாததால் ஆடு மாடுகள் தண்ணீருக்கு தவித்து வருகின்றன.இந்நிலையில் கோடை மழை பெய்யும் என வானிலை மையம் தொடர்ந்து அறிவித்த போதும் மழை திண்டுக்கல் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. மக்கள் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் பல இடங்கள் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி திண்டுக்கல் மாவட்டம், வேல்வார்க்கோட்டை ஜமாத் சார்பில் ஊரணியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அனைத்து மக்களும் இன்புற்று வாழ, அனைத்து உயிர்களும் செழிக்க, மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story