பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் 

கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். தொழுகைக்கு பின் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று.இயன்ற வரை பிறருக்கு உதவவேண்டும் என்ற உயரிய நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாட படுகிறது.

மேலும் இஸ்லாமியர்களுன் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயனமும் இந்த மாதத்தில் நடைபெற்று அங்கு அவர்கள் தங்களின் தொழுகை கடமையை நிறைவேற்றுவர். மேலும் பக்ரீத் தொழுகை முடிந்த பிறகு வசதி படைத்தவர்கள் ஆடு,மாடுகளை பலியிட்டு உற்றார்,உறவினர்களுக்கும் வசதியற்ற சக சமூக மக்களுக்கும் வழங்குவார்கள். பொருளாதாரத்தில் நடுத்தரமான மக்கள் நான்கு அல்லது அதற்க்குமேலும் கூட்டாக சேர்ந்து கூட்டு குர்பான் என்ற பெயரில் அனைவருக்கும் உதவுவார்கள்.

இந்த நிலையில் கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

Tags

Next Story