கோவிலுக்கு பூஜை பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்

ஒசூர் அருகே மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோவிலுக்கு பூஜை பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது, இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு 19ம் தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது, இதனை ஒட்டி முதல் நாள் இன்று காலை முதல் வேத மந்திரங்கள் ஓத அம்மனுக்கு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து பாகலூர் பகுதி இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அம்மனுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் மற்றும் பூ பழங்கள் நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சம் ஆகியவற்றை கொண்டு வந்து அம்மனுக்கு வழங்கினர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை அம்மனுக்கு வைத்து வழிபாடு செய்தனர்.வந்திருந்த இஸ்லாமியர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர் இந்த மத நல்லிணக்கம் அனைவருடைய மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story