உலகத் தமிழர் முத்தமிழ் முருகர் மாநாடு பணிகள் குறித்து ஆய்வு

உலகத் தமிழர் முத்தமிழ் முருகர் மாநாடு பணிகள் குறித்து ஆய்வு

அமைச்சர் சேகர் பாபு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, உலகத் தமிழர் முத்தமிழ் முருகர் மாநாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பழனியில் உலகத் தமிழர் முத்தமிழ் முருகர் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து வரும் முருக பக்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை 9 மணியளவில் வருகை தந்தார்.

காலையில் ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்ற அவர் கால பூஜையின் போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் இணை ஆணையர் மாரிமுத்து பிரசாதங்களை வழங்கினார். தொடர்ந்து கோயிலில் செய்யப்பட்டு வரும் பஞ்சாமிர்த விற்பனைக்கான ஏற்பாடுகளையும், பிற பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பழனி ஆண்டவர் கல்லூரியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

Tags

Next Story