கல்லூரியில் முத்தமிழ் விழா

கல்லூரியில் முத்தமிழ் விழா

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் முத்தமிழ் விழா நடந்தது. 

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் முத்தமிழ் விழா நடந்தது.

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் முத்தமிழ் விழா, கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினராக, மேனாள் மருத்துவக் கல்வி இயக்குநர் முனைவர் ஏ.எல்.மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். திரைப்பட பின்னணி பாடகர் முகேஷ், பின்னணி பாடகி மாலதி லெட்சுமணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் வரவேற்றார். நிறைவாக, உயிர்வேதியியல் துறைத்தலைவர் இராமமூர்த்தி நன்றி கூறினார்.

Tags

Next Story